50 வகை உணவு… பிரமாண்டமாக நடந்த ரன்பீர் கபூர்- ஆலியா பட் திருமணம்!

இந்தி நடிகர்கள் ரன்பீர் கபூர்- ஆலியா பட் திருமணம் பாந்திராவில் நடந்தது.

இந்தி திரையுலகில் காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை ஆலியா பட் திருமண விழா நேற்று மும்பையில் தொடங்கியது. இயக்குனரும், ஆலியா பட்டை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தவருமான கரண் ஜோகர் ஆலியா பட்டுக்கு மருதானி (மெகந்தி) வைத்து சடங்கைத் தொடங்கி வைத்தார்.

இதில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் சகோதரிகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நடிகர் அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா நந்தா தனது கணவருடன் கலந்து கொண்டார். ரன்பீர் கபூர் தாயார் நீது கபூர் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


இன்று பஞ்சாபி முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் ரன்பீர் கபூர்- ஆலியா பட் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை 4 புரோகிதர்கள் நடத்தி வைத்தனர். திருமணத்திற்கு முதல் ஆளாக கரண் ஜோகர், நடிகைகள் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் வருகை தந்தனர். முன்னதாக ரன்பீர் கபூர் மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ண ராஜ் பங்களாவில் இருந்து திருமணம் நடைபெறும் வாஸ்து இல்லத்திற்கு ஊர்வலமாக வந்தனர். திருமணத்தில் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டனர்.


50 வகை உணவு
திருமணத்தில் விருந்தினர்களுக்காக 50 வகையான உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்தாலியன், பஞ்சாபி, மெக்‌சிகன், ஆப்கான் உணவு வகைகள் திருமணத்தில் பிரதான இடம் பிடித்திருந்தது. நீது கபூர் தனது மகனின் திருமணத்திற்கு டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்திருந்தார். ஆலியா பட் சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்காக 25 வகையான சைவ உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. யாரும் கேமரா பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!