‘கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிய திருடன்!

ஆந்திராவில் கோவிலுக்குள் கொள்ளையடிக்க சென்று போது ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மாதம் எல்லையம்மன் கோவில் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கம் வெள்ளி பணம் ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் சென்றார். கோவிலுக்குள் சென்ற கொள்ளையன் கருவறையில் இருந்த அம்மன் தங்க வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வெளியே வர முயற்சித்தான். அப்போது கோவிலுக்குள் இருந்து வெளிய வர விடிய விடிய முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு மர்ம நபர் ஒருவர் சிக்கிக் கொண்டு இருந்ததை கண்டு கூச்சலிட்டனர்.

பினன்னர், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஸ்ரீகாகுளம் கஞ்சிலி பகுதியை சேர்ந்த பாப்பா ராவ் (வயது 40) என தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!