ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படத்தில் சமந்தாவுக்கு நயன்தாரா கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!