மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்து – நண்பர்கள் 2 பேர் சாவு!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.


தேன்கனிக்கோட்டை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


நண்பர்கள்
தேன்கனிக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்த ருத்ரப்பா மகன் சிவசங்கர் (வயது 23), இவரும், அதே பகுதியை சேர்ந்த பீரங்கியப்பா மகன் முனியப்பா (22) என்பவரும் நண்பர்கள். இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.


உகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். வீட்டு செலவுக்கு பணம் கொடுத்து விட்டு இருதுகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.


லாரி மோதி சாவு
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதி்ல் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்த தேனிகனிக்கோட்டை போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார். பலியான 2 பேரது உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!