போதையில் பள்ளியிலேயே முரட்டு தூக்கம் போட்ட ஆசிரியர்.!

தெலுங்கான மாநிலத்தில் தலைக்கேறிய போதையில் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே முரட்டு தூக்கம் போட்டுள்ளார்.

தெலுங்கான மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள சிட்டபோயன்ன கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சசிகாந்த் எனும் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணிக்கு சேர்ந்தது முதல் தினமும் குடித்து விட்டு பள்ளிக்கு செல்வதும், மது போதையில் வகுப்பறையில் படுத்து தூங்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் சென்று ஆசிரியர் சசிகாந்த் தினமும் குடித்து விட்டு வந்து, பாடம் ஏதும் நடத்தாமல் தூங்குகிறார் என குற்றம் சாட்டினர்.

மாணவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து அப்பகுதி இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அப்போது ஆசிரியர் சசிகாந்த மதுபோதையில் நாற்காலியில் படுத்து தூங்கிகொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் சசிகாந்தை தட்டி எழுப்பி கேள்வி கேட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூங்கிகொண்டிருந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து போதை ஆசிரியரை பணி நீக்கம் செய்து வேரு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!