குளிக்கிறதை வீடியோ எடுத்து… சிக்கிய கடிதம்… மாட்டுக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய பெண்!

தான் குளித்ததை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி(வயது 21). மகன் அஜித்.

அஜினாதேவி சிதம்பரம் அருகே வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார்.

அஜினாதேவி கடந்த 16-ந் தேதி விடுமுறைக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த மாணவி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் அஜினாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார்.

கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில், ‘மன்னிச்சிடு அம்மா எனக்கு வேற வழி தெரியல. ஒருத்தன் நான் குளிக்கிறதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவன் கிட்ட இருந்து நான் தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல, என்னை மன்னித்துவிடு. தம்பியை நல்லா பார்த்துக்கோ. எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசை. ஆனா என்ன பண்ண, கடவுள் என்னை வாழ விடல. எனக்கு வேற வழி இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

3 செல்போன் எண்கள்…

இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் அஜினாதேவியின் செல்போனை சோதனை செய்தபோது, அதில் 3 எண்கள் அழைப்புகள் வராதவாறு பிளாக் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த எண்கள் கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் யார்? என்பது குறித்தும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!