தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து சாவு!

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ (வயது 16). இவர் டி.நரசிப்புரா அருகே மாதாபுரா உயர் நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியதை முன்னிட்டு தேர்வு எழுத தேர்வு மையமான டி.நரசிப்புரா வித்யோதயா ஜூனியர் கல்லூரிக்கு அவர் வந்திருந்தார்.

மேலும் அவர் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அனுஸ்ரீ திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அனுஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

இதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும் சக மாணவ-மாணவிகளும் சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!