புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் – மனம் உடைந்த தந்தை விபரீதமுடிவு!

திருமணமான 2 மாதங்களில் காதலனுடன் தன் மகள் ஓடிப்போனதை எண்ணி மனம் உடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதியராய் இல்லற வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே திடீரென்று அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் புதுப்பெண் வைஷ்ணவி, திடீர் என்று வீட்டில் இருந்து மாயமானார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் கணவர் மாரியப்பன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வைஷ்ணவிக்கு அன்பில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காதல் இருந்து வந்துள்ளது.

ஆனால் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மாரியப்பனை திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே காதலனை தொடர்பு கொண்டு அவரோடு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வைஷ்ணவியின் தந்தை சண்முகம், கட்டி கொடுத்த தன் மகள் ஓடிப்போனதை எண்ணி மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் அவர் பூச்சிக்கொல்லி குடித்து விட்டு மயங்கி சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு லால்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!