நடனம் சொல்லி கொடுத்த டான்ஸ் மாஸ்டர் – பள்ளி மாணவி கர்ப்பம்!

எடப்பாடி அருகே நடனம் சொல்லி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ்மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் எடப்பாடி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்தி நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி படித்து வரும் பள்ளியின் ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தார். அந்த பழக்கத்தில் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடமும் பழகி உள்ளார். அவர்களும் தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்த மாஸ்டர் தானே என பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி திடீரென்று மாயமானார். காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். இதையடுத்து தங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற டான்ஸ் மாஸ்டர் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.

இதனிடையே மாயமான மாணவியுடன் சரவணன் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவரை அழைத்துக் கொண்டு பழனிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

மாணவிக்கு 15 வயது தான் ஆகிறது என்பதால் இந்த வழக்கு பற்றி விசாரிக்க சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார்.

அதில் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் கற்றுக் கொடுக்கும்போது நெருங்கி பழகி, வீடுவரை வந்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியில் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!