பெண் வன அலுவலருக்கு டார்ச்சர்.. கஷாயம் வைத்து 5 மாத கருவை கொன்ற மாமியார்!

கஷாயம் வைத்தே ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி உள்ளார் மாமியார்.. இந்த கொடுமை கடலூரில் நடந்துள்ளது..! கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் சரவணன்.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த நர்மதா என்பவருக்கும் கடந்த வருடம் மே மாதம் கல்யாணம் ஆகியுள்ளது.. நர்மதாவுக்கு 29 வயதாகிறது.. இவர் வன அலுவலராக பணி புரிபவர்.. கல்யாணத்தின்போது, பெண்ணின் பெற்றோர் நிறைய சீர்வரிசை பொருட்களை தந்துள்ளனர்.

வரதட்சணை

ஆனாலும், இன்னும் வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கணவனும், மாமியாரும்.. 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நர்மதாவை மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நர்மதா கர்ப்பமானார்… 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் கொடுமைகள் தொடர்ந்துள்ளது.. சம்பவத்தன்று, மாமியார் கஷாயம் வைத்து, அதில் விஷத்தை கலந்து நர்மதாவுக்கு தந்துள்ளனர்.. இதில் கர்ப்பம் கலைந்துவிட்டது.

கஷாயம்

இதற்கு மேல் பொறுக்க முடியாமல், நர்மதா திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்… அதன்பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, இவரது மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மல்லிகா, சரவணனை கைது செய்தனர்.. கணவனும், மாமியாரும் இப்போது ஜெயிலில் உள்ளனர்.. நாத்தனார்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள்.- source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!