மாரடைப்பு வந்தவருக்கு திடீரென நாக்கில் வளர்ந்த முடி.!

கேரளாவில் நெஞ்சு வலி வந்தவருக்கு திடீரென நாக்கில் முடி வளர்ந்த சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது.


கேரளா மாநிலம் கொச்சினில் 50 வது முதியவருக்கு நாக்கில் முடி வளர்ந்த சோக சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் வந்துள்ளார். 50 வயது முதியவரான அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு இடது பக்கம் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் உடலில் இது பக்கம் உள்ள உடல் பாகங்கள் சரியாக செயல்படாமல் பலவீனமாக இருந்துள்ளது.

டாக்டர்கள் அவருக்கு கஞ்சி, கூழ் போன்ற கரைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட அறிவுறுத்தியுள்ளனர். அவரும் கடந்த 1 மாதமாக அவ்வாறான உணவுகளையே சாப்பிட்டு வர அவருக்கு திடீரென நாட்டில் கருப்பு நிறத்தில் ஏதோ தோன்றியுள்ளது. பின்னர் அது மெல்ல பரவி அதில் முடி முளைத்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர் மீண்டும் மருத்துமவமனைக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இது மிகவும் அரிதாக ஏற்படும் பிரச்சனை என்று இது தற்காலிக பிரச்சனை தான் என அதற்கு மருந்து எழுதி கொடுத்துள்ளனர். நெஞ்சு வலி வந்த முதியவருக்கு திடீரென நாக்கில் முடி முளைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!