உக்ரைனில் இடுப்பு நசுக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் பலியான சோகம்!

அந்த கர்ப்பிணி பெண்மணி, அடிவயிற்றின் கீழ் இரத்தம் வழிய ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கி உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷிய படைகள் கொடூர தாக்குதலை தொடுத்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய குண்டுவீச்சு தக்குதலில் அவரும் அவருடைய குழந்தையும் உயிரிழந்தனர்.

அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.
ரஷியாவின் இந்த கொடூர செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் கொடூரங்களில் உச்சகட்ட கொடூர நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஏபி செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் நிகழ்விடத்திற்கு சென்று இந்த கொடூரத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த கர்ப்பிணி பெண்மணி, அடிவயிற்றின் கீழ் இரத்தம் வழிய ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கி உள்ளது.

இந்த தாக்குதலில் அவருடைய வயிற்றில் இருக்கும் சிசு இறந்துவிடும் என்பதை அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்த உடனே, அந்த பெண் “என்னையும் உடனடியாக கொன்றுவிடுங்கள்” என்று அழுது கெஞ்சி உள்ளார். அந்த பெண்ணின் இடுப்பு பகுதி நசுக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்ப பையில் இருந்து சிசு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிசு உயிருடன் இல்லை.

அதன்பின் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் 30 நிமிடங்களில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள், மகப்பேறு மருத்துவமனையை உக்ரேனிய பிரிவினைவாதிகள் ஒரு தளமாகப் பயன்படுத்தியதாகவும், நோயாளிகள் அல்லது மருத்துவர்கள் போன்றோர் யாரும் மருத்துவமனை கட்டிடத்ததின் உள்ளே இல்லை என்றனர். லண்டனில் உள்ள ரஷிய தூதரகம் இந்த படங்களை “போலி செய்தி” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!