விரைவில் டும் டும் டும்… மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்!

நடிகர் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் நடிப்பில் அண்மையில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் வெளியானது. இந்நிலையில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை, கெளதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.


நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளன. ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கெளதம். இதனை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து இருவருமே அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் மஞ்சிமா மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்த பதிவை வைத்து இருவரும் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யபப்பட்டுள்ளது.


கெளதம் கார்த்திக் தன்னுடைய பதிவில், மஞ்சிமா மோகனின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!