கல்லூரிக்கு மொபட்டில் சென்ற கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம்!

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் பாரதி (வயது 24). இவர், பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை பாரதி, தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு மொபட்டில் சென்றார்.

வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் பட்டாபிராம் அடுத்த அமுதூர்மேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த தனியார் கம்பெனி பஸ் இவரது மொபட் மீது மோதியது.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

இதில் மாணவி பாரதி, மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய பாரதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார், பலியான மாணவி பாரதி உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த முனியாண்டி(55) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!