உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷியா குவித்துள்ள அணு ஆயுதங்கள்!

வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர் விமானங்கள், மிக் 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்கள் ரஷியாவிடம் தயார் நிலையில் உள்ளது.


உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் வலிமை குறித்த தகவல்கள் வருமாறு:-

ரஷியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் – 5977

உக்ரைன் எல்லையில் குவித்துள்ள அணு ஆயுதங்கள் – 1588

இதுதவிர கைவசம் உள்ள அணு ஆயுதங்கள் – 4369

அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு தயாராக உள்ள ஏவுகணைகள்:- 812

இந்த ஏவுகணைகளை செலுத்தினால் அவை ரஷியாவில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் லண்டன் நகரை அடைந்துவிடும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் 500 கிலோ டன் முதல் 50 கிலோ டன் வரையிலான வெடிபொருள்கள் நிரப்பி தாக்குதல் நடத்தலாம்.

வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர்விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. இதுபோல மிக் 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளது.

கடல் வழி தாக்குதல் நடத்த போர் கப்பல்களும், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு கப்பல்களிலும் யுத்த தளவாடங்களும், சூப்பர் சானிக் வேகத்தில் செல்லும் ஏவுகணைகளையும் இயக்க முடியும்.

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க ரஷிய அதிபரின் அனுமதி வேண்டும். இதற்கான அனுமதி பெட்டகம் ரஷிய அதிபரிடம் உள்ளது. இதன் பெயர் செகட். அதிபர் உத்தரவிட்டால் அணு ஆயுதங்கள் உக்ரைன் நோக்கி பறந்து செல்லும். அணு ஆயுதங்கள் வெடிக்கும் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வ நாசம் விளையும். இதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு தொடரும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!