வீட்டிலுள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் 1 மணிநேரத்தில் சிகப்பழகை பெறலாமா..?


வெயில், குளிர் என பருவ நிலை மாறுதல்களுக்கு ஏற்ப நம்முடைய சருமங்களில் பல மாற்றங்கள் உண்டாவதுண்டு. அதற்காக நாமும் கண்ட கிரீம்களை வாங்கிப் போட்டு இன்னும் கொஞ்சம் சருமத்தைப் பாழாக்கிக் கொண்டது தான் மிச்சம்.

ஆனால் வீட்டிலுள்ள சில பொருள்களைக் கொண்டு நம்முடைய கருத்துப் போன சருமத்தை மிக வேகமாக பளிச்சென மாற்றிவிட முடியும்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் தயிர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் சேர்க்க வேண்டும். இம்மூன்றையும் நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி காய்ந்தபிறகு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் கருமை நிறம் மங்கி விடும்.


ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மேலும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கால், கை, முதுகு, முகத்திற்கு தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள்வரை வைத்திருந்து பின் கழுவலாம். முகத்தில் உள்ள கருந்திட்டுகள் கூட போய்விடும்.

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி. அதோடு ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை உடலில் கருமை நிறம் உள்ள இடங்களில் போட வேண்டும். வாரம் மூன்று முறை இதை செய்து வந்தால் சருமம் பளிச்சிடும். மிக வேகமாக நல்ல நிறத்துக்கு சருமம் மாறும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!