பெற்ற மகள் என்றும் பாராமல் அடித்து கொன்று கொடூரன் செய்த கேவலம்!

மகளை கொன்று உடலுடன் பாலியல் உறவு கொண்ட கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டம் ஜைடா டோங்கர் கிராமத்தை சேர்ந்தவர் திலிப் சிங் பிஹல் (40 வயது). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி 14 வயதில் மகள் உள்ளார்.

இதற்கிடையில், திலிப் சிங் தனது மகளை காணவில்லை என பஜ்ரங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையான திலிப்புடன் சென்றபோது கடைசியாக பார்த்ததாக அந்த கிராம மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் மாற்றுத்திறனாளியான திலிப்பிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மகளை திலிப்பே கொன்றதும், பின்னர் உயிரிழந்த உடலுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கொடூர தந்தை திலிப்பை கைது செய்தனர்.

கொடூரன் திலிப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது மகள் தனது பேச்சை கேட்காமல் இருந்துள்ளார். இதனால், தனது மகளை அழைத்துக்கொண்டு திலிப் நேற்று இரவு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய திலிப் முயற்சித்துள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இதுபற்றி உறவினர்களிடம் கூறிவிடுவேன் என்று தந்தையை எச்சரித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த திலிப் காட்டிற்குள் கிடந்த கட்டையை கொண்டு தனது மகளை அடித்து கொன்றுள்ளான். உயிரிழந்த பின்னர் தனது மகளின் உடலுடன் அந்த கொடூரன் பாலியல் உறவு வைத்துள்ளான்.

திலிப் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த போலீசார் வனப்பகுதிக்கு சென்று பிணமாக கிடந்த 14 வயது சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொடூரன் திலிப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!