இளம்பெண்ணின் முன் மின்சார ரெயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர்!

சென்னையில் இருந்து தாம்பரம் சென்ற ரெயிலில் பெண்களில் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். இளைஞரின் ஆபாச செய்கை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியானதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23), என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பரங்கிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். போலீசார் லட்சுமணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!