காதலர் தினத்தன்று திருமணம் செய்யும் திருநங்கைகள்!

உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் காதலை தெரிவித்த திருநங்கைகள் இருவரும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணத்தை செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா.

இவர்கள் இருவரும் திருநங்கைகள். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்த திருநங்கைகள் இருவரும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இத்திருமணத்தை செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். ஐகோர்ட்டில் மனு செய்து அதற்கான அனுமதியை பெற்று திருமணத்தை பதிவு செய்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!