உலகிலேயே இளம் கோடீஸ்வர சிறுவன்.!

உலகிலேயே இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மோம்பா ஜூனியர் பெற்றுள்ளார்.

மோம்பா ஜூனியரின் தந்தை இஸ்மாய்லியா முஸ்தபா நைஜீரியாவின் வசதி படைத்த சமூகவலைத்தள பிரபலமாக இருக்கிறார். தந்தையின் முயற்சியால், 9 வயதிலேயே மோம்பா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 25 ஆயிரத்து 700 பின்தொடர்பாளர்களைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுவன்தான் சொகுசு வாழ்க்கையைப் படம் எடுத்து அடிக்கடி பகிர்ந்து வருகிறார். விலை உயர்ந்த சிவப்பு வண்ண லாம்போர்கினி அவென்டடார் சொகுசு கார் முன்பு நின்றபடி படம் பிடித்துப் போட்டுள்ளார். அதோடு, விதவிதமான வடிவமைப்பில் உடைகளை அணிகிறார். தன் தந்தையுடன் தனி விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கார் வாங்கும்போதும், எனக்குப் பரிசு கொடுத்த தந்தைக்கு நன்றி என்று பதிவிடுகிறார். இவரது தந்தை நைஜீரியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் மாறி, மாறி வசிக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு மகனின் 6-வது பிறந்தநாளுக்கு முதல் முறையாக சொகுசு வீட்டை இஸ்மாய்லியா முஸ்தபா வாங்கிக் கொடுத்து அசத்தினார்.

இது குறித்து அவர் டைம்லைனில் எழுதும்போது, “சொந்தமாக வீடு வைத்திருப்பது எப்போதும் சிறந்த உணர்வைத் தரும். அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குப் பிறகும், உங்களைக் கைவிடாமல் இரு கரம் கூப்பி அழைக்கும் ஒரே இடம் வீடுதான். அப்பாவிடமிருந்த இந்த வீட்டைப் பிறந்தநாள் பரிசாக தருகிறேன். உனக்கு புதிய வீடு கிடைத்ததற்கு வாழ்த்துகள் மகனே…” என்று குறிப்பிட்டிருந்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!