‘மிஸ் அமெரிக்கா’ அழகி பட்டம் வென்றவர் விபரீதமுடிவு!

உயிரிழந்த செஸ்லி கிரிஸ்ட் 2019 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்டின் மரணம் தற்கொலையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என கருதப்படுகிறது. 1991 இல் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில் அவர் பிறந்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் பயின்ற பின், 2017 ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.அதன் பின் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.

2019ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் வென்ற பின்னர் தமது வேலையை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.செஸ்லி கிரிஸ்ட் மறைவுக்கு நடப்பாண்டின் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து இரங்கல் தெரிவித்துள்ளார். செஸ்லி கிரிஸ்ட் உயிரிழந்த செய்தி இதயத்தை உடைக்கும் வகையில் இருந்ததாகவும், அது நம்ப முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாஸ்லி கடைசியாக கட்டிடத்தின் 29-வது மாடியில் நின்றுகொண்டிருந்தபோது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளார். அதன்பின்னர் அவர் எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை. இதனால், அவர் கட்டிடத்தின் 29-வது மாடியில் இருந்தே கிழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி ரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். – source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!