கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா விபரீதமுடிவு!

பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவின் பேத்தி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா இன்று (வெள்ளிக்கிழமை ) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.

சவுந்தர்யா மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பயிற்சி மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சவுந்தரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சவுந்தரியா, எடியூரப்பாவின் பேத்தி ஆவார். சவுந்தரியா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!