டி.வி. நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி!

கேரளாவில், டி.வி. நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சூரிய தாரா. ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், எரூர் பகுதியில் ஒரு கடையில் நடிகை சூரிய தாரா தோசை மாவு வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டுத்தர குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர். அப்போது சூரிய தாராவின் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் (முகநூல் பக்கத்தில்) சூரிய தாரா பதிவிட்டு கூறியிருப்பதாவது:-

இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார். இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!