இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் மர்மமான முறையில் மரணம்…!


அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கன்னகரி கிருஷ்ண சைதன்யா (30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அமெரிக் காவின் டெக்சாஸ் நகருக்கு சென்றார்.

அங்கு டல்லாசின் புறநகரான ஆர்விங்டனில் ஒரு வீட்டில் விருந்தினராக தங்கியிருந்து ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது.

உடனே வீட்டின் உரிமையாளர் அவரது அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு கிருஷ்ணசைதன்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. மரணம் குறித்து தெலுங்கானாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!