மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
- தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
- சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
- காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
- வரும் சந்தர்ப்பங் களை நழுவவிடக்கூடாது.
- உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
- தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
- செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
- திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
- செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
- லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
- சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
- எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!