மனைவியின் திடீர் நடவடிக்கை…ஆடி போன அபிநய்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே வந்த அபிநயின் மனைவி செய்த செயல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நல்லாதானே போய்க்கொண்டிருந்தது ஏன் இந்த திடீர் மாற்றம் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 50 நாட்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கும் அபிநய் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் போது அபிநய் பாவனியிடம் நடந்து கொண்டது பற்றி பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது.

அபிநய் பாவனியிடம் அளவுக்கு அதிகமாக அன்பை காட்டிக் கொண்டிருக்கிறார் என்று வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பாவனியும் சில நேரங்களில் பீல் பண்ணி அபிநயிடம் எந்த மாதிரி பழகுகிறார் என்று அடிக்கடி கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் தன்னிடம் பிரண்ட்ஷிப்பை தாண்டி பழகுகிறாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கமல் முன்னிலையில் கூட கூறியிருக்கிறார். இவர்களின் பிரச்சனை பெரிய பிரச்னையாக பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நேரத்தில் வெளியே அவருடைய மனைவி அவருக்கு ஆதரவு தான் முதலில் கொடுத்து வந்தார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அபிநயிடம் ரசிகர்கள் பலர் அவருடைய மனைவி என்ன மாதிரி நடந்து கொண்டார் என்று தான் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அபிநய் நார்மலாக எல்லா மனைவிமார்களும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படித்தான் என்னுடைய மனைவியும் நடந்து கொண்டார். இந்த விஷயத்தில் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தற்போது தன்னுடைய பெயருக்கு பின்னாடி இருந்த அபிநய் பெயரை தூக்கிவிட்டார். இது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றி விட்டதா??அதனால் தான் அவர் அப்படி செய்திருக்கிறாரா??என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.- source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!