விதவையை கொன்று கிணற்றில் வீசிய பட்டதாரி வாலிபர் பகீர் தகவல்!

நாமக்கல் கொசவம்பட்டி ரோஜா நகரில் உள்ள கிணற்றில், கடந்த 22ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சாக்கு மூட்டையில் கட்சி வீசப்பட்டிருந்தது. நாமக்கல் போலீசார் சடலத்தை மீட்டு, கொலை செய்யப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண், கொசவம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த லலிதா(40) என்பது, இரு தினங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான சுரேந்தர் (26) என்பவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் விதவை லலிதாவை அடித்துக் கொலை செய்ததாக சுரேந்தர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து, லலிதாவின் 4 பவுன் நகையை மீட்டனர். அப்போது அவர் அளித்த வாக்கமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: லலிதாவின் கணவர் 20 ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். லலிதா கடலை வியாபாரம் செய்துவந்தார். சுரேந்தரின் பெற்றோர் நடத்தி வந்த மளிகைக்கடை அருகில் லலிதா வசித்ததால் அவருக்கு சுரேந்தர் உதவி செய்துவந்துள்ளார். இந்நிலையில் சில மாதமாக இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்து பெற்றோர் சுரேந்தருக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் சுரேந்தர், லலிதாவை சந்திக்கவில்லை.

ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் ‘‘வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது. நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம்’’ என அழைத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி லலிதாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற சுரேந்தர் அவரை அடித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றில் வீசியுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.- source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!