துன்பங்களை தீர்க்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்!

சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜெபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம்.

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் இந்த மந்திரத்தை ஜெபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!