இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உப்பு தீபம்!

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபம் ஏற்றுவதால் தீரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்.


சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.

உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பகைவர்கள் தொல்லை நீங்க, வெள்ளிக்கிழமை தோறும் உப்பு தீபம் ஏற்றலாம். எவ்வளவு குடைச்சலை உங்களுக்கு பகைவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை செயல்படாமல் செய்துவிடும் இந்த உப்பு தீப வழிபாடு. அதற்காக மனதில் வஞ்சம் வைத்துக் கொண்டு எந்த ஒரு பரிகாரத்தையும் செய்யக்கூடாது. வஞ்சம் இல்லாத, துன்பம் நீங்க கூடிய வகையில் உங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

பணப் பிரச்சினையில் கஷ்டப்படுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் விருத்தி உண்டாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர, பதவி உயர்வு கிடைக்க, மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெற, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற, பிள்ளை வரம் வேண்டுபவர்கள், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. மற்றவர்களை அழிக்கும் நோக்கத்துடனும், சுயநல எண்ணத்துடனும் உப்பு தீப வழிபாடு செய்தால் எதிர்வினையையும் சந்திப்பீர்கள்.

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!