கொழுந்தனாரை திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதம்..!

கணவன் இறந்ததால் கொழுந்தனாரை பெண் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாவட்டம் முசாபர்நகர் மாவட்டம் புதனா நகர் நக்வா கிராமத்தை சேர்ந்தவர் அல்ஹா (30). இவருக்கும் பிரமோத் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

அதேவேளை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பிரமோத் சந்தேகத்திற்கு இடமான வகையில் கொல்லப்பட்டார். அவரது உயிரிழப்பை தொடர்ந்து அல்ஹா தனது கணவர் பிரமோத்தின் சகோதரனான கொழுந்தனார் மனோஜ் குமாரை இரண்டாவதாக மறு மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இதற்கிடையில், அல்ஹா தனது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையிலான பணத்தை இருப்பு வைத்துள்ளார். அந்த பணத்தை தனக்கு தரும்படி அல்ஹாவிடம் அவரது கணவர் மனோஜ் கேட்டுள்ளார். ஆனால், தனது பணத்தை மனோஜிடம் கொடுக்க விரும்பாத அல்ஹா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு மனோஜ் தனது மனைவியிடம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை தன்னிடம் தரும்படி மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு அல்ஹா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மனைவி அல்ஹாவை சுட்டுள்ளார். இதில், உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அல்ஹா படுக்கையில் சாய்ந்தபடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மனோஜ் குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் தந்தையையும் கைது செய்து விசாரணை நடஹ்த்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!