மனைவியை தீர்த்துக் கட்டிய கணவருக்கு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

உணவில் போதைப்பொருள் கலந்து மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டேவிசன் நகரத்தை சேர்ந்தவர் ஜேசன் ஹரிஸ். இவரது மனைவி கிறிஸ்டினா டேவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது உடலை உட்ற்கூராய்வு செய்ததில் போதைப்பொருள் அதிக அளவில் உட்கொண்டதில் கிறிஸ்டினா உயிரிழந்தது தெரியவந்தது. போதைப்பொருள் பழக்கம் இல்லாத கிறிஸ்டினாவின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளது என அவரின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கிறிஸ்டினாவின் மரணத்திற்கு அவரது கணவர் ஜேசனே காரணம் என்று கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

உணவில் அதிக அளவில் போதைப்பொருள் கலந்து கொடுத்து மனைவி கிறிஸ்டினாவை ஜோசன் கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு கணவர் ஜேசன் உணவில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து ஜேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!