கால பைரவருக்கு 16 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.

சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கருப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.

பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும். இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!