தொழில் சிறக்க, கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

கடன், தொழில், சொத்து பிரச்சனை, வேலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கீழே பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வாழ்நாள் முழுவதும் மீள முடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.

தொழில் சிறக்க..

நிரந்தர வேலை இல்லாதவர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள், தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.

சொத்து சுகம்

சொத்து அமையாதவர்கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாதவர்கள், வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாக இருப்பது, மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் செவ்வாயகிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.

வேலை வாய்ப்பு

நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சனையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் தீராத நோய், கடன், பகை உள்ளவர்கள் சனிக்கிழமை நவதானிய அடை தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!