முன்னாள் மனைவி என்று நினைத்து வங்கி ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்!

கேரளாவில் முன்னாள் மனைவி என்று தவறுதலாக நினைத்து வங்கி ஊழியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


கேரளாவின் பலுசேரி அருகே வசித்து நபர் ஒருவர் தனது மனைவி விவாகரத்து செய்துள்ளார். ஆனால், விவாகரத்து பெற்றுக்கொண்ட மனைவியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அவரது முன்னாள் மனைவி பலுசேரியில் உள்ள நன்மந்தா அருகே உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று வங்கிக்கு சென்ற அந்த நபர், தனது மனைவில் அமர்ந்து வேலை பார்த்து வந்த இடத்தில் ஒரு பெண் இருப்பதை பார்த்து நேராக சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்கிய பின்னர்தான் பார்த்துள்ளார் அந்த பெண், தன்னுடைய முன்னாள் மனைவி அல்ல. வேறொரு பெண் என்று.

படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், சக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இன்று அந்த நபரின் முன்னாள் மனைவி விடுமுறை எடுத்துள்ளார். இதனால் மற்றொரு ஊழியர் அவரது இடத்தில் உட்கார்ந்து வேலைப்பார்த்துள்ளார். தன் முன்னாள் மனைவிதான் அந்த இடத்தில் இருப்பார் எனக்கருதி முகத்தைக் கூட பார்க்காமல் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பட்டப்பகலில் வங்கியில் நுழைந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!