இந்த நாளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்!

சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

திருமணப் பொருத்தம் பார்க்கின்ற பொழுது ‘செவ்வாய் ஜாதகமா?’ என்று சிலர் பார்ப்பார்கள். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால் மாப்பிள்ளைக்கும் அதே போல் இருக்க வேண்டும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி என்பர்.

செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி. எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் விரதம் இருந்து முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் தோஷம் விலகி யோகம் சேரும்.

இந்த மாதம் திருக்கார்த்திகை 19.11.2021 அன்று வருகின்றது. அன்றையதினம் விரதம் இருந்து வீட்டின் பூஜையறையில் முருகப்பெருமானை நினைத்து உள்ளம் உருகி வழிபடலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!