துணிச்சல் இல்லாத பேட்டிங் – தோல்வி குறித்து விராட் கோலி கருத்து!

பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர்.

இந்திய அணிக்காக விளையாடும் போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும் என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!