பிள்ளைகள் இருந்தும் கணவன்-மனைவி விபரீதமுடிவு..!

பொன்னேரி அருகே தடபெரும்பக்கம் ஊராட்சியில் வசிப்பவர் ஜெயராமன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜம்மாள் (55). இவர், தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகளும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

ஜெயராமன், பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை சரிவர கவனிக்க முடியாமல் ராஜம்மாள் தவித்து வந்தார். போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடி வந்த தம்பதியினர், பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் மனமுடைந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.

அதன்படி நேற்று கணவன்-மனைவி இருவரும் அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்தனர். இதில் ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய ராஜம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!