பிரபல விஜய் டிவி தொடர் தற்காலிக நிறுத்தம்..?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செந்தூரப்பூவே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. துவக்க தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, மற்ற தினங்களில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துவரும் செந்தூரப்பூவே தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, ஷகிலாவின் மகள் மிலா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.- source: dinamani * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!