விஜே பார்வதி பற்றி அறியப்படாத சில விஷயங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. யாரும் இல்லாத ஒரு தீவில் எவ்வித தொடர்பு சாதனங்களும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத போட்டியாளர்கள் அந்த தீவிலிருந்து தப்பிக்க வேண்டும்.

இதற்கிடையே நிகழ்ச்சி தொகுப்பாளர் கொடுக்கும் டாஸ்க்குகளையும் செய்ய வேண்டும். பிக்பாஸ் போலவே 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி முதல் நாள் எபிசோடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் கலந்துகொள்ளும் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர்தான் VJ பார்வதி, வீடியோ ஜாக்கியாக மாறிய நடிகை பார்வதியை பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகளைப் தெரிந்துகொள்வோம்.

பெருமைக்குரிய மதுரைப் பெண்

பார்வதி மதுரையைச் சேர்ந்தவர், மதுரையை வேராக கொண்டதில் பெருமைப்படுகிறார். வரலாற்று நகரத்தின் மீதான தனது அன்பை வெளிப்படுத்துவதில் அவர் பெரு மகிழ்ச்சி கொள்கிறார்.

பத்திரிகை மீதான காதல்

பத்திரிகை மற்றும் தொடர்பியலிலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்லூரியிலும், கலோரி முடிந்தும் நிருபராக வேலை செய்தார்.

ரேடியோ ஜாக்கி

பார்வதி தனது துறையில் பெரிய இடத்தை அடைவதற்கு முன்பு சில ஆண்டுகள் மதுரையில் வானொலி ஜாக்கியாக பணியாற்றினார்.- source: abp-epaper * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!