அந்த ஒரு சென்டிமெண்ட்டால் திருடிய நகைகளை ஃப்ரேம் போட்டு வைத்திருந்த திருடன்…!


11 சவரன் நகையைக் திருடிச்செய்த ஆசாமி லவ் சென்டிமெண்ட்டால் சைதாப்பேட்டை போலீசில் சிக்கினான். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த குணசுந்தரி என்பவரைத் தாக்கிவிட்டு 11 சவரன் நகைத் திருடிச்சென்றார். காயமடைந்த குணசுந்தரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த சைதாப்பேட்டை போலீசார் திருடனைத் தேடி வந்தனர். விசாரணையில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவரே நகைகளைத் திருடியுள்ளார் என்று தெரிந்தது. திருடிய நகைகளை அவர் வீட்டில் ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்.

சில ஆண்டுகள் முன்பு சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவில் வசித்த அவர் தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது என்பதால் சோகத்தில் இருந்திருக்கிறார். இதனால் குடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்வதாக நினைத்து வேறு வீட்டுக்குப் போய் நகைகளைப் பறிந்து வந்திருக்கிறார். காதலியின் நினைவாக உடனே அதை ஃபிரேம் போட்டு மாட்டவும் செய்திருக்கிறார். – Source: tamil.samayam.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!