ஊழல் வழக்கில் மாலி நாட்டின் முன்னாள் பிரதமர் கைது!

ஊழல் வழக்கில் மாலி நாட்டின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 2017-18 வரை பிரதமராக இருந்தவர் பொவ்மியொ மைஹா. 67 வயதான இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

2014-ம் ஆண்டு மாலி அதிபராக இருந்த இப்ராகிமிற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஜெட் விமானம் வாங்கியதில் முன்னாள் பிரதமர் பொவ்மியொவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குதொடர்பான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜெட் விமானம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் பிரதமர் பொவ்மியொ நேற்று கைது செய்யப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!