2 பாம்புகளுக்கு ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டிக்கு நேர்ந்த கதி!

சுமார் 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன், காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவி உள்ளார்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த மன்மோகன் என்ற பாம்பாட்டி, ரக்சா பந்தன் தினத்தன்று 2 பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றார். அப்போது ஒரு பாம்பு அவரது காலில் கடித்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுமார் 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன், காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவி உள்ளார். மேலும் பாம்பு கடித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அவற்றின் விஷத்தை சேகரித்து கொடுத்துள்ளார். பலருக்கு உதவி செய்து மக்களிடையே நன்மதிப்பை பெற்ற அவர், பாம்பு கடித்து இறந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!