புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்கள் இந்த நாளில் விரதமிருங்க..!

இந்த நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை


ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, சுக்ரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள்தான் ‘ஆடிப்பூரம்’ என்று அழைக்கப்படுகின்றது. அந்த நாள் இந்த ஆண்டு வருகிற 11-8-2021 (புதன்கிழமை) அன்று வருகிறது. ஆடிப்பூர நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சில ஆலயங்களில் முளைகட்டிய பயிரை தயாரித்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வார்கள். ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே, பச்சைப் பயிரைத் தண்ணீரில் நனைய வைப்பர். அது ஆடிப்பூரத்தன்று நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டு, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு கொடுப்பர். நம்பிக்கையோடு அதைச் சாப்பிட்டால் வாரிசு பிறக்கும். நம் இல்லத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!