தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ‘ரவுடி பேபி’ கோரிக்கை..!

திருப்பூர், அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர், டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். பின்னர், இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.

இவர், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் போடுவதாகவும், அதற்காக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அத்துடன், தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசு சார்பில் தனக்கு வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, யூ-டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதனை, சைபர் கிரைம் போலீஸார் தீவிர தேடுதல் வேட்கையின் மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர். மதனைப்போலவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுபவர்கள் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்தவகையில், திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற லிவிங் டூ கெதரில் வாழும் யூ-டியூப் தம்பதி வீடியோக்கள் மூலமாக பலரை கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும், தனிப்பட்ட நபர்களை குறித்து அசிங்கமாகவும், அரைகுறை ஆடை அணிந்து வீடியோ பதிவிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மீதும் பலர் புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.- source: newstm * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!