சீனாவின் தலையீடுகளால் அம்பாந்தோட்டைக்கு பாதிப்பு இல்லை – இந்தியா கடலோரக் காவல்படை


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றுக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நாம் சிறிலங்காவுடன், புரிந்துணர்வு உடன்பாடு செய்திருக்கிறோம். சீனாவின் தலையீடுகளால் எமது உறவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அவர் பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!