மிதுனராசிக்கான பிலவ புத்தாண்டு 2021 பலன்கள்!

மிதுன ராசி காலபுருஷ தத்துவத்தில் 3வதாக அமைந்துள்ள ராசி. மிருகசீரிடம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2, 3 பாதங்களை உள்ளடக்கியது மிதுன ராசி. மிதுன ராசியின் அதிபதி புதன்.


இந்த பிலவ ஆண்டு தொடங்கும் போது ராசிக்கு 10ல் புதன் அமர்ந்திருக்கிறார்.


ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். சனி 8ம் இடத்திலும், குரு 9ல் அதிசார நிலையிலும், 11ம் இடத்தில் உச்சம் பெற்ற சூரியன், சுக்கிரன், சந்திரன் இருக்கின்றனர். 12ல் ராகுவும், 6ல் கேதுவும் இருக்கின்றனர். இந்த ராசிக்கு பிறக்கும் பிலவ வருடம் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

அஷ்டம சனியால் கவனம் தேவை :

கோச்சார ரீதியாக மிதுன ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை இருக்கும். அதாவது எளிதாக இலக்கை அடைந்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாது அல்லது எதிலும் சில தடைகள் ஏற்படக்கூடிய நிலையே இருக்கும்.

குறிப்பாக இளைஞர்களின் வாழ்வில் பல சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நிதி நிலையால் ஏற்படும் பிரச்சினையால் மன ரீதியாக ஒருவித விரக்தி ஏற்படக்கூடும். இதனால் உறவுகள் எப்படி, நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை உணர்வீர்கள்.

வேலையின் அருமையை உணர்த்தக்கூடியவராக இருப்பார். எதிர் பாலினத்தவர் குறித்த புரிதலை கொடுப்பார்.

குரு கொடுக்கும் அற்புத பலன் :

சனியுடன் அமர்ந்து பெரிய பலனைத் தர இயலாத நிலையில் இருந்த குரு பகவன், தற்போது அதிசார நிலையாக 5 மாதங்கள் தனது 5ம் பார்வையால் யோக பலன்களை அளிக்கக் கூடியவாக இருப்பார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் 13 வரையான காலத்தில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கக்கூடிய உங்களுக்கு ஒரு ஆறுதலைத் தரும் விதமான பல்வேறு யோக பலன்கள் கிடைக்கும். நிதிநெருக்கடிகள் தீரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி நிறைவேறும்.

​ராகு – கேது தரும் பலன்

புத்தாண்டில் ராகு கேது 12 – 6 ஆகிய இடங்களில் அமர்வதால் உங்களுக்கு வேற்று மொழி பேசுபவர்கள் மூலம் அனுகூல பலனைப் பெற்றிடலாம். மாற்று மொழி, மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் மூலமாகவும் ஆதரவான, அதிர்ஷ்ட பலன்களைப் பெறுவீர்கள்.

சிலருக்கு அன்னிய மொழி பேசும் வரன் அமைய வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியாக ஓரளவு நற்பலன் கிடைக்கும் என்றாலும், பெரியளவில் புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணம், பொருள் ஆகியவற்றை கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.

சுய தொழில் செய்வோர் உங்களின் திறமையைப் பயன்படுத்துவதும், புதிய திட்டங்களை அமல்படுத்துவதால் நீங்கள் நினைத்ததை விட முன்னேற்றத்தை அடையலாம்.


சனி அஷ்டமத்தில் ஆட்சி பெற்று இருக்கும் நிலையில், குருவும் அந்த வீட்டில் நீச்சமாவதால் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். எந்த காரியத்தையும் தொடங்கும் முன் நல்ல யோசித்து செய்வது நல்லது.

தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் என சுப ஆண்டாக அமையும்.

அதிர்ஷ்ட பலன் :

தமிழ் ஆண்டில் நடுப்பகுதி முதல் உங்களுக்கு பல்வேறு வகையில் யோகம் மற்றும் நல்ல பலன்களைப் பெறும் வகையில் இருக்கும்.

இதுவரை இருந்த கஷ்டங்கள், சங்கடங்கள் நீங்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

ஜனன கால ஜாதகத்தில் நல்ல தசா புத்தி கொண்டிருந்தால் மிக சிறந்த பலன்களைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

12ல் ராகுவும், 6ல் கேது என்ற யோக பலன் ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், பலருக்கு வீடு, மனை வாங்கும் பாக்கியம் ஏற்படும். பேச்சில் தனித்துவம் இருக்கும். மற்றவர்களை விட தனித்துவமாகச் செயல்படுவதால் முன்னேற்றம் தேடி வரும்.

பெண்களுக்கு தேவைகள், ஆசைகளை நிறைவேறக் கூடிய அற்புத காலம். இன்னல்களிலிருந்தும், கசப்பான அனுபவத்திலிருந்து தப்பிக்கலாம்.

கவனமாக இருக்க வேண்டியவை :

என்ன தான் அதிசார குரு மற்றும் அடுத்து நிகழும் குரு பெயர்ச்சியும் மிதுன ராசிக்கு யோகங்களைத் தருவதாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு பிரச்சினைகளைத் தரக்கூடிய அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

அதன் காரணமாக பண பரிமாற்றத்திலும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் மற்றும் குடும்பத்தின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது அவசியம்.

ரிஷபம் ராசி குரு அதிசார பெயர்ச்சி 2021 பலன்கள் : திடீர் அதிர்ஷ்டம், திருப்புமுனையைத் தரும்

செப்டம்பர் 13ம் தேதிக்கு பின் அக்டோபர், நவம்பர் 20ம் தேதி வரை சற்று கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். அதன் பின்னர் குரு மீண்டும் முறைப்படி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆன பின்னர் அவரின் 5ம் பார்வை கிடைத்து அற்புத பலனைப் பெற்றிடலாம்.

சூழலையும் சமாளிக்க அமைதியையும், அனுசரித்துச் செல்வதும் அவசியம். சொல் செயலில் கவனமாக இருந்தாலே உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!