சாயி சத்சரிதத்தை கையில் வைத்துக் கொண்டு இப்படி செய்யுங்க..!

சாயி சத்சரிதத்தை நெஞ்சுக்கு அருகே வைத்துக்கொண்டு, கண்களை மூடி பாபாவை நினைத்து வேண்டுகோள் வைத்தால், அது நிச்சயம் சாத்தியமாகிவிடும். ஏனென்றால் பாபாவைப் பற்றி படிப்பது, அவரது தெய்வீக சந்நிதானத்தில் இருப்பதற்கு சமமானது. அவருடன் தியானம் செய்வதைப் போன்றது.

சத்சரிதம் ஒரு பலம், ஆற்றல். அன்புடன் படிக்கப்பட்டால், அது விருப்பத்தை நிறைவேற்றும். நோயில் இருந்தும் ஏன் மரணத்தில் இருந்தும்கூட, விடுவித்துவிடும். எனவே எது வேண்டும் என்றாலும், அதை கோரிக்கையாக பாபாவிடம் வையுங்கள்.

தினமும் சத்சங்கம் படிப்பவருக்கு நம்பிக்கை அதீதமாக கிட்டும். ஆரோக்கியம், செல்வம், அமைதி, சந்தோஷம் தானே வந்து சேரும். பாபாவின் வாழ்க்கையைப் படிப்பது மட்டுமின்றி, அதன் மகிமையை பிறருக்கும் எடுத்துச்சொல்லுங்கள். உங்களுடன் பாபாவும் அமர்ந்துகொண்டு கதை கேட்பார். உங்களுக்கு சக்தியும் வெற்றியும் வழங்குவார்.

பாபா எதைச் செய்தாலும், அதுதான் உனக்கு சிறப்பானது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருக்கும் இடத்தில், சந்தேகம் இருக்க முடியாது. சந்தேகம் இருந்தால், நம்பிக்கை இருக்கமுடியாது. பாபாவின் மீது முழு நம்பிக்கை கொள்வோம். அவர் தனது வாழ்க்கை காப்பாற்றுவதற்காக ஏழு கடல் தாண்டியும் வருவார்.- Source: timestamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!