வீட்டு பூஜை அறையில்.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. துரதிஷ்டம் தான் வரும்.!

பூஜை அறையில் நாம் என்னென்ன சிறு சிறு தவறினை செய்கிறோம் என்பது குறித்து பார்க்கலாம்.

நாம் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் நமக்குத் ஒரு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன. ஒரு வீட்டில் பூஜை அறை என்பது நம்முடைய வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வழியாகவும் இருக்கிறது. இப்பொது நாம் என்ன செய்யக்கூடாது, செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரியை வைத்து விளக்கு ஏற்றி வைத்தால் மிகவும் நன்மையான விஷயம். பஞ்சுத் திரியால் தீபமேற்றும் போது யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆனால் திங்கள்கிழமை அன்று உங்கள் கைகளால் பஞ்சு திரியை தொடக் கூடாது என்பது சாஸ்திர ரீதியான மரபு.
கோவிலுக்கு செல்லும் போது வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு, வீட்டில் விளக்கு ஏற்றிய பின்னர் தான் கோவிலுக்கு செல்லவேண்டும். வீடு தான் முதலில் நமக்கு கோவில் என்பதை மறந்துவிட வேண்டாம்.

வீட்டில் சாமிக்கு நிவேதனம் வைக்கும் போது வீட்டில் ஏற்கனவே பயன்படுத்திய எச்சில் பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. பூஜைக்கென்று தனியாக ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். இலையை வைத்தே நிவேதனம் செய்வது சிறந்தது.

சாமி படத்திற்கு நாம் தினமும் போடும் மாலை காயும் வரையிலும் அப்படியே விட்டுவிடக் கூடாது, என்று எடுத்து விடவும் கூடாது என்று ஏற்படும் காலதாமதம் ஏகாயாமல் வாடிய நிலையிலும் எடுக்க கூடாது. மாலை காய்ந்து ஷாருக்கானை நிலையில் எடுத்தல் துரதிருஷ்டம் வந்து சேரும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!