காரைக்காலில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!


காரைக்காலில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). பெயிண்டர்.

ராஜ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எனவே அவரது தாயார் அமுதா, மகனை தேடிச்சென்றார். அப்பொழுது அருகிலுள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் தலைவேறு, உடல் வேறாக இறந்து கிடப்பதாக தகவலறிந்து அமுதா அங்கு சென்று பார்த்தபோது அது தனது மகன்தான் என்பதைக் கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து அவர் காரைக்கால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இரவு 9.40 மணிக்கு நாகூர் வழியாக காரைக்காலுக்கு வந்த திருச்சி பயணிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05