நேற்றிலிருந்து ஆரம்பமாகியது அஞ்சல் மூல வாக்களிப்பு…!


உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்கள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், தேர்தல் பணியகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான முதற்கட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

இந்த வாக்களிப்பு சுமுகமாகவும், எந்தச் சம்பவங்களும் இன்றியும் இடம்பெற்றது. ஏனைய அரச பணியாளர்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச போக்குவரத்துப் பணியாளர்கள், அஞ்சல், தொடருந்து, திணைக்களங்கள், முப்படையினர், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் பணியாளர்கள் இந்த வாக்களிப்பின் போது அஞ்சல் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
– Source: puthinappalakai.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH